Buddha's Wife Yasodhara
When i read about this article i felt that Yasodhara is Stronger than Buddha புத்தனாவது சுலபம் , ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது ? புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி , குழந்தையை பார்க்க போகிறார் . மனைவி கேட்கிறாள் : “ என்னை விட்டுப் போனது பரவாயில்லை . ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே ! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன் . ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது . ஏன் என்னை காயப்படுத்தினீர்கள் ?” புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார் . மனைவி மகனின் , முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார் . அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள் . அது இது தான் : “ நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா ?” புத்தர் சொல்கிறார் : “ தாராளமாக . அதற்கு நான் மலை , காடு , ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான் . ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்...